Sunday, June 29, 2008

நானில்லை

நீ
ஊதியவுடன் அணைந்து விட
நான் ஒன்றும்
திரி விளக்கு அல்ல.
தினம் தினம்
புதியதாய்
உதித்துவரும் சூரியன்
என்னைத் தீண்டிய
உன் கைகள்
கருகாமல்
இருந்திருந்தால்
நீ தீண்டியது
சத்தியமாக நானில்லை

- பி. எம். நாகராஜன்

நீந்தக் கற்றுக்கொள்

வைகையாக இருந்தால்
ஒரு நாள் வற்றும்.
ஜீவநதி சிந்துவாக இருந்தால்?
நீர் தீரும்வரை
காத்திருப்பதைவிட
நீந்தக்கற்றுக்கொள்
கரை உன் காலடி
தேடி வரும்

பி.எம்.நாகராஜன்