Tuesday, December 08, 2009

நேரமில்லை

உன் பிரிவால்
நான்படும்
வேதனை சகிக்காமல் ‍-‍ அந்த
வானம் அழுகிறது

ஆனால்
உனக்கோ என்னை
நினைத்துப் பார்க்கக்கூட‌
நேரமில்லை என்கிறாய்.

-பி.எம். நாகராஜன்

Friday, December 04, 2009

நிலவாக

இரவாக இருந்தாலும்
பரவாயில்லை
இருளாக இருந்தாலும்
பரவாயில்லை

நிலவாக‌
நீ இருக்கும்
வானில் மட்டுமே
நட்சத்திரமாக‌
நான் வருவேன்.

-பி.எம். நாகராஜன்

Monday, November 23, 2009

சுவாசம்

‍‍மனதோடு
மற்போர்
செய்பவளே!

மற்றெல்லாவற்றோடும்
விற்போர்
செய்பவளே!

நீலவான் போல
நீண்டதும் அல்ல
அலைகடல் போல
ஆழமானதும் அல்ல- என்
நேசம்

அது
உனக்காகவே
உயிரோடு இருக்கும் - என்
உயிரின் சுவாசம்

-பி.எம். நாகராஜன்

Friday, November 06, 2009

நன்றிக் கடன்

ஒவ்வொரு நாளும்
ஓராயிரம் முறை
எழுதுகிறேன்
"இறைவா நன்றி"
"இறைவா நன்றி"
என்று

இது எனக்கு
தரப்பட்ட‌
தண்டனையல்ல‌
உனை எனக்குதந்த
அவனுக்கு நான் செய்யும்
நன்றிக்கடன்.

‍‍ -பி.எம். நாகராஜன்