Thursday, September 23, 2010
Monday, September 20, 2010
மகாமகம்
தினம்தினம் நான் தேடும்
தேவதை அம்மா - நீ
தேவியர் துதிபாடும்
ஸ்ரீதேவி அம்மா
அதிகாலை பூக்கும்
கதிரவன் அம்மா - முழு
மதிமுகம் பார்க்கும்
நதி நீர் அம்மா
ஆயர் பாடியில்
யசோதை அம்மா - நீ
மீனவர் குடியில்
ஸ்ரீசுதாமணி அம்மா.
புல்வெளி உறக்கம்
பனித்துளி அம்மா - கோடி
மின்மினி பறக்கும்
உன்விழி அம்மா
கார்த்திகையில் தொடங்கியது
புதுயுகம் அம்மா
காத்திருந்து கொண்டாடும்
மாகாமகம் அம்மா
ஆறுகல் மூக்குத்தி
நூறு விண்மீனம்மா - அதைக்
கருணையில் நீராட்டும்
இருகண் மீனம்மா
செவியோரம் சுருள்முடி
சிறுவாணி அருவியம்மா - அதைக்
பூங்கைகள் ஒதுக்குவது
புதுக்கவிதை அம்மா
ஒரு நிறம் அல்ல
கரு நிறம் அம்மா - அது
எல்லாம் கலந்தவுன்
திரு நிறம் அம்மா
மழலைகள் பேசும்
பிழைமொழி அம்மா - அழகு
மயில் கண்டாடும்
மழைமுகில் அம்மா
திருவடியில் அடியார்கள்
ஒருகோடி அம்மா - நிதம்
பதம்தேடி வருவார்கள்
பலகோடி அம்மா
ஆயிரம் பாசுரம்
அலங்காரம் அம்மா - அவை
ரீங்காரம் செய்யும்
ஓங்காரம் அம்மா
ஆதிலிங்கமே சிவன்
ஜோதிலிங்கமே அம்மா - அதில்
பாதிலிங்கமே உமா
பார்வதி அம்மா
வானம் பெருக்கல்
வானம் அம்மா - அதுவுன்
ஞானம் அன்பு
தானம் அம்மா
வாரண ஆரண்யம்
கேரளம் அம்மா - அதன்
தீராப் பெருமைக்கு
காரணம் அம்மா
எல்லோருக்கும் தாயாக
இருக்கும் அம்மா - என்
இல்லத்தில் சேயாக
வருவாய் அம்மா.
-பி.எம். நாகராஜன்
தேவதை அம்மா - நீ
தேவியர் துதிபாடும்
ஸ்ரீதேவி அம்மா
அதிகாலை பூக்கும்
கதிரவன் அம்மா - முழு
மதிமுகம் பார்க்கும்
நதி நீர் அம்மா
ஆயர் பாடியில்
யசோதை அம்மா - நீ
மீனவர் குடியில்
ஸ்ரீசுதாமணி அம்மா.
புல்வெளி உறக்கம்
பனித்துளி அம்மா - கோடி
மின்மினி பறக்கும்
உன்விழி அம்மா
கார்த்திகையில் தொடங்கியது
புதுயுகம் அம்மா
காத்திருந்து கொண்டாடும்
மாகாமகம் அம்மா
ஆறுகல் மூக்குத்தி
நூறு விண்மீனம்மா - அதைக்
கருணையில் நீராட்டும்
இருகண் மீனம்மா
செவியோரம் சுருள்முடி
சிறுவாணி அருவியம்மா - அதைக்
பூங்கைகள் ஒதுக்குவது
புதுக்கவிதை அம்மா
ஒரு நிறம் அல்ல
கரு நிறம் அம்மா - அது
எல்லாம் கலந்தவுன்
திரு நிறம் அம்மா
மழலைகள் பேசும்
பிழைமொழி அம்மா - அழகு
மயில் கண்டாடும்
மழைமுகில் அம்மா
திருவடியில் அடியார்கள்
ஒருகோடி அம்மா - நிதம்
பதம்தேடி வருவார்கள்
பலகோடி அம்மா
ஆயிரம் பாசுரம்
அலங்காரம் அம்மா - அவை
ரீங்காரம் செய்யும்
ஓங்காரம் அம்மா
ஆதிலிங்கமே சிவன்
ஜோதிலிங்கமே அம்மா - அதில்
பாதிலிங்கமே உமா
பார்வதி அம்மா
வானம் பெருக்கல்
வானம் அம்மா - அதுவுன்
ஞானம் அன்பு
தானம் அம்மா
வாரண ஆரண்யம்
கேரளம் அம்மா - அதன்
தீராப் பெருமைக்கு
காரணம் அம்மா
எல்லோருக்கும் தாயாக
இருக்கும் அம்மா - என்
இல்லத்தில் சேயாக
வருவாய் அம்மா.
-பி.எம். நாகராஜன்
Wednesday, March 31, 2010
நேசிக்க மாட்டாயா?
உன்னை - நான்
நேசிக்கும் அளவு
என்னை - நீ
நேசிக்க வேண்டாம்.
நீரை - வேர்
நேசிக்கும் அளவாவது
என்னை - நீ
நேசிக்க மாட்டாயா?
-பி.எம். நாகராஜன்
நேசிக்கும் அளவு
என்னை - நீ
நேசிக்க வேண்டாம்.
நீரை - வேர்
நேசிக்கும் அளவாவது
என்னை - நீ
நேசிக்க மாட்டாயா?
-பி.எம். நாகராஜன்
Tuesday, December 08, 2009
நேரமில்லை
உன் பிரிவால்
நான்படும்
வேதனை சகிக்காமல் - அந்த
வானம் அழுகிறது
ஆனால்
உனக்கோ என்னை
நினைத்துப் பார்க்கக்கூட
நேரமில்லை என்கிறாய்.
-பி.எம். நாகராஜன்
நான்படும்
வேதனை சகிக்காமல் - அந்த
வானம் அழுகிறது
ஆனால்
உனக்கோ என்னை
நினைத்துப் பார்க்கக்கூட
நேரமில்லை என்கிறாய்.
-பி.எம். நாகராஜன்
Friday, December 04, 2009
நிலவாக
இரவாக இருந்தாலும்
பரவாயில்லை
இருளாக இருந்தாலும்
பரவாயில்லை
நிலவாக
நீ இருக்கும்
வானில் மட்டுமே
நட்சத்திரமாக
நான் வருவேன்.
-பி.எம். நாகராஜன்
பரவாயில்லை
இருளாக இருந்தாலும்
பரவாயில்லை
நிலவாக
நீ இருக்கும்
வானில் மட்டுமே
நட்சத்திரமாக
நான் வருவேன்.
-பி.எம். நாகராஜன்
Monday, November 23, 2009
சுவாசம்
மனதோடு
மற்போர்
செய்பவளே!
மற்றெல்லாவற்றோடும்
விற்போர்
செய்பவளே!
நீலவான் போல
நீண்டதும் அல்ல
அலைகடல் போல
ஆழமானதும் அல்ல- என்
நேசம்
அது
உனக்காகவே
உயிரோடு இருக்கும் - என்
உயிரின் சுவாசம்
-பி.எம். நாகராஜன்
மற்போர்
செய்பவளே!
மற்றெல்லாவற்றோடும்
விற்போர்
செய்பவளே!
நீலவான் போல
நீண்டதும் அல்ல
அலைகடல் போல
ஆழமானதும் அல்ல- என்
நேசம்
அது
உனக்காகவே
உயிரோடு இருக்கும் - என்
உயிரின் சுவாசம்
-பி.எம். நாகராஜன்
Friday, November 06, 2009
நன்றிக் கடன்
ஒவ்வொரு நாளும்
ஓராயிரம் முறை
எழுதுகிறேன்
"இறைவா நன்றி"
"இறைவா நன்றி"
என்று
இது எனக்கு
தரப்பட்ட
தண்டனையல்ல
உனை எனக்குதந்த
அவனுக்கு நான் செய்யும்
நன்றிக்கடன்.
-பி.எம். நாகராஜன்
ஓராயிரம் முறை
எழுதுகிறேன்
"இறைவா நன்றி"
"இறைவா நன்றி"
என்று
இது எனக்கு
தரப்பட்ட
தண்டனையல்ல
உனை எனக்குதந்த
அவனுக்கு நான் செய்யும்
நன்றிக்கடன்.
-பி.எம். நாகராஜன்
Sunday, June 29, 2008
நானில்லை
நீ
ஊதியவுடன் அணைந்து விட
நான் ஒன்றும்
திரி விளக்கு அல்ல.
தினம் தினம்
புதியதாய்
உதித்துவரும் சூரியன்
என்னைத் தீண்டிய
உன் கைகள்
கருகாமல்
இருந்திருந்தால்
நீ தீண்டியது
சத்தியமாக நானில்லை
- பி. எம். நாகராஜன்
ஊதியவுடன் அணைந்து விட
நான் ஒன்றும்
திரி விளக்கு அல்ல.
தினம் தினம்
புதியதாய்
உதித்துவரும் சூரியன்
என்னைத் தீண்டிய
உன் கைகள்
கருகாமல்
இருந்திருந்தால்
நீ தீண்டியது
சத்தியமாக நானில்லை
- பி. எம். நாகராஜன்
நீந்தக் கற்றுக்கொள்
வைகையாக இருந்தால்
ஒரு நாள் வற்றும்.
ஜீவநதி சிந்துவாக இருந்தால்?
நீர் தீரும்வரை
காத்திருப்பதைவிட
நீந்தக்கற்றுக்கொள்
கரை உன் காலடி
தேடி வரும்
பி.எம்.நாகராஜன்
ஒரு நாள் வற்றும்.
ஜீவநதி சிந்துவாக இருந்தால்?
நீர் தீரும்வரை
காத்திருப்பதைவிட
நீந்தக்கற்றுக்கொள்
கரை உன் காலடி
தேடி வரும்
பி.எம்.நாகராஜன்
Monday, April 07, 2008
சொந்தம்
இத்தனை இரவுகள்
கடந்து வந்திருக்கிறேன்
எத்தனை சொந்தங்கள்
நட்சத்திரக் கூட்டங்களுக்கு நடுவே
நிலவு
இன்று ஏனோ உணர்கிறேன்
பிரிவை
சூரியனைப் பிரிந்து உறங்காமல்
தேய்ந்துகொண்டிருக்கும்
நிலவு!
- மங்கை
கடந்து வந்திருக்கிறேன்
எத்தனை சொந்தங்கள்
நட்சத்திரக் கூட்டங்களுக்கு நடுவே
நிலவு
இன்று ஏனோ உணர்கிறேன்
பிரிவை
சூரியனைப் பிரிந்து உறங்காமல்
தேய்ந்துகொண்டிருக்கும்
நிலவு!
- மங்கை
Thursday, March 27, 2008
இரவின் விடியல்
புதிய
வெளிச்சத்தைப்
பார்த்த பரபரப்பில்
விளக்கின் மீதே
விழுந்த விட்டில்கள் நாம்!
சுட்டபொழுது
சுதாரித்துக்கொண்டோம்
விழுங்கிய தீயையே
தீபமாக்கி
நம்மில் எரியவிட்டு
மின்மினிகளானோம்!
கோடானுகோடி
மின்மினிகள்
கூடியதால்
இருளின் சிறகுகள்
படபடக்க
இரவிலேயே விடிந்தது!
- மதீன் சையத்
வெளிச்சத்தைப்
பார்த்த பரபரப்பில்
விளக்கின் மீதே
விழுந்த விட்டில்கள் நாம்!
சுட்டபொழுது
சுதாரித்துக்கொண்டோம்
விழுங்கிய தீயையே
தீபமாக்கி
நம்மில் எரியவிட்டு
மின்மினிகளானோம்!
கோடானுகோடி
மின்மினிகள்
கூடியதால்
இருளின் சிறகுகள்
படபடக்க
இரவிலேயே விடிந்தது!
- மதீன் சையத்
Tuesday, March 25, 2008
தீர்ப்பு
மனிதம் மறந்த
கலவரக் கும்பல்
வான்நோக்கி உயர்ந்தன
காவலர் துப்பாக்கிகள்
படைத்தவனுக்குத் தண்டனை?
- பெ.நாயகி
கலவரக் கும்பல்
வான்நோக்கி உயர்ந்தன
காவலர் துப்பாக்கிகள்
படைத்தவனுக்குத் தண்டனை?
- பெ.நாயகி
Tuesday, March 18, 2008
தீர்ப்பு
மனிதம் மறந்த
கலவரக் கும்பல்
வான்நோக்கி உயர்ந்தன
காவலர் துப்பாக்கிகள்
படைத்தவனுக்குத் தண்டனை?
- பெ.நாயகி
கலவரக் கும்பல்
வான்நோக்கி உயர்ந்தன
காவலர் துப்பாக்கிகள்
படைத்தவனுக்குத் தண்டனை?
- பெ.நாயகி
Monday, March 17, 2008
ஒன்றும் இல்லை
அள்ளி வீசுகிறாய்
அனைத்துக்குமான உதாரணங்களை
எப்போதாவது உரைத்துள்ளாயா
உதாரணத்துக்கான உதாரணத்தை?
உதாரணம் உண்மையாகில்
உதாரணத்தின் உதாரணம்
உண்மையாகும்தானே?
அதை விடு
எனக்கோ உனக்கோ
என்ன உதாரணம்?
எனக்கு நீயும் உனக்கு நானுமாய்
உதாரணமாவது சாத்தியமாகுமா?
உதாரணங்களின் மூல உதாரணத்தை
உய்த்தறியும்வரை
உனக்கும் எனக்கும்
ஒன்றுமில்லை போ!
ஒன்றுமேயில்லை
போ!போ!
-நட்சத்ரன்
அனைத்துக்குமான உதாரணங்களை
எப்போதாவது உரைத்துள்ளாயா
உதாரணத்துக்கான உதாரணத்தை?
உதாரணம் உண்மையாகில்
உதாரணத்தின் உதாரணம்
உண்மையாகும்தானே?
அதை விடு
எனக்கோ உனக்கோ
என்ன உதாரணம்?
எனக்கு நீயும் உனக்கு நானுமாய்
உதாரணமாவது சாத்தியமாகுமா?
உதாரணங்களின் மூல உதாரணத்தை
உய்த்தறியும்வரை
உனக்கும் எனக்கும்
ஒன்றுமில்லை போ!
ஒன்றுமேயில்லை
போ!போ!
-நட்சத்ரன்
Saturday, March 15, 2008
நினைவுப் பரிசு
எல்லா பிறந்த நாட்களிலும்
உன் நினைவுப் பரிசு
என்னிடம்.
அவற்றை விட
நீ எனக்கில்லை என்றான
நாள் மட்டும்
முதன்மையான
நினைவுப் பரிசாய்!
- ரிஷபன்
உன் நினைவுப் பரிசு
என்னிடம்.
அவற்றை விட
நீ எனக்கில்லை என்றான
நாள் மட்டும்
முதன்மையான
நினைவுப் பரிசாய்!
- ரிஷபன்
Saturday, February 23, 2008
வெளிச்சம்
அலைக்கழிவாய் தொடங்கும்
நகரவாழ்வில்
பயணம் தொடங்க முடியாமல்
சாத்தப் பட்டிருக்கும்
கதவுகளின் வழியே
இடுக்கிக் கொண்டு பார்க்கிறது
அமைதியின் கண்கள்
பனி பொழியும் இரவொன்றில்
இருள் கவ்வும் பாதையில்
நகரின் மயான அமைதியொன்றை
வெளிச்சமிட்டுக் காட்டுகிறது நிலா
- ஜி. மஞ்சுளா
நகரவாழ்வில்
பயணம் தொடங்க முடியாமல்
சாத்தப் பட்டிருக்கும்
கதவுகளின் வழியே
இடுக்கிக் கொண்டு பார்க்கிறது
அமைதியின் கண்கள்
பனி பொழியும் இரவொன்றில்
இருள் கவ்வும் பாதையில்
நகரின் மயான அமைதியொன்றை
வெளிச்சமிட்டுக் காட்டுகிறது நிலா
- ஜி. மஞ்சுளா
வரம்
சாமியார் மட
சந்தில் உள்ளது
அச்சாம்பல் நிறப்புற்று.
சாயங்காலம்
செந்தூர வர்ணம்கொள்ளும்
பாம்பில்லாத புற்றுக்கு
நாள்தோறும்
பாலூற்றத் தவறமாட்டாள்
நண்டு என்ற நாச்சியார்
முட்டையின் மேலோடு
உடைத்துக் காலடியில் வைக்க
மஞ்சள் கரு
வானம் பார்க்கும்
கறையான் கருக்கொள்ளாத
புற்றிடம் சுற்றிவந்து
பிள்ளை வரம் கேட்டவள்
போன வருடம்
ஒரு வெள்ளை நாளின்
இரவுப் பொழுதில்
பிள்ளை ஒன்றை ஈன்றெடுத்தாள்
இப்போதும் சுற்றுகிறாள்
கால நேரமற்று,
புற்றெல்லாம் பரவிக்கிடக்கிறது
இன்னொருவனின் கருப்பு நிழல்.
- ப. முருகன்
சந்தில் உள்ளது
அச்சாம்பல் நிறப்புற்று.
சாயங்காலம்
செந்தூர வர்ணம்கொள்ளும்
பாம்பில்லாத புற்றுக்கு
நாள்தோறும்
பாலூற்றத் தவறமாட்டாள்
நண்டு என்ற நாச்சியார்
முட்டையின் மேலோடு
உடைத்துக் காலடியில் வைக்க
மஞ்சள் கரு
வானம் பார்க்கும்
கறையான் கருக்கொள்ளாத
புற்றிடம் சுற்றிவந்து
பிள்ளை வரம் கேட்டவள்
போன வருடம்
ஒரு வெள்ளை நாளின்
இரவுப் பொழுதில்
பிள்ளை ஒன்றை ஈன்றெடுத்தாள்
இப்போதும் சுற்றுகிறாள்
கால நேரமற்று,
புற்றெல்லாம் பரவிக்கிடக்கிறது
இன்னொருவனின் கருப்பு நிழல்.
- ப. முருகன்
Friday, February 22, 2008
விட்டு விடுதலையாகி
குதிரையை லாயத்தில் கட்டு
கடிவாளம் கண்பட்டைகளை அகற்று
சற்றே ஓய்வு கொள்ளட்டும்
நடந்து செல்
நாற்றிசையும் கூர்ந்து நோக்கு;
மனிதர்களை
விலங்குகளை;
புழுபூச்சிகளை,
பறவைகளை,
மலர்களை,
மரங்களை,
உறுமிச்செல்லும் வாகனங்களை
அன்பாய் கவனி;
அண்ணாந்து வான் நோக்கு
அதிசயங்களில் மெய்மற
குனிந்து பூமியை தரிசி
எதேனும் பிடிபட்டால்
எடுத்துச்செல்
இல்லையேல்
உண்டுறங்கி ஓய்வு கொள்.
- சின்ன் கபாலி, காலச்சுவடு
கடிவாளம் கண்பட்டைகளை அகற்று
சற்றே ஓய்வு கொள்ளட்டும்
நடந்து செல்
நாற்றிசையும் கூர்ந்து நோக்கு;
மனிதர்களை
விலங்குகளை;
புழுபூச்சிகளை,
பறவைகளை,
மலர்களை,
மரங்களை,
உறுமிச்செல்லும் வாகனங்களை
அன்பாய் கவனி;
அண்ணாந்து வான் நோக்கு
அதிசயங்களில் மெய்மற
குனிந்து பூமியை தரிசி
எதேனும் பிடிபட்டால்
எடுத்துச்செல்
இல்லையேல்
உண்டுறங்கி ஓய்வு கொள்.
- சின்ன் கபாலி, காலச்சுவடு
Thursday, February 21, 2008
உலக மகாயுத்தம்
ஒரு கூரைமேல்
காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை.
அணில் துரத்த
காக்கை பறந்தது
காக்கை பறக்க
அணில் தாவியது
முடிவில்
அணில் பறந்தது; காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை.
- ஆத்மானாம்
காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை.
அணில் துரத்த
காக்கை பறந்தது
காக்கை பறக்க
அணில் தாவியது
முடிவில்
அணில் பறந்தது; காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை.
- ஆத்மானாம்
Wednesday, February 20, 2008
கேள்விக்கணைகள்
கண்ணெதிரே காண்கின்ற கொடுமைகளை கண்டு
கேள்விகள் எழுவது இயல்பல்வா?
என்னுள் கேள்விக் குறிகள்
வேள்வி நடத்திக் கொண்டிருக்கின்றன..
வெள்ளை பணத்தை விருத்தி செய்பவன்
கருப்பு பணத்திடம் கையேந்துவதேன்
காலை வெட்டி மலை உடைத்து நாடு சமைப்பவன்
வீடின்றி வீதிமுனையில் வாடுவதேன்
மணிமேகலை பார்த்த மணித்திருநாட்டில்
பட்டினி சாவோலை தொடர்வதேன்
என்னுள் கேள்விக் குறிகள் இன்னும்
வேள்வி நடத்திக்கொண்டிருக்கின்றன.
- சித்ரா
கேள்விகள் எழுவது இயல்பல்வா?
என்னுள் கேள்விக் குறிகள்
வேள்வி நடத்திக் கொண்டிருக்கின்றன..
வெள்ளை பணத்தை விருத்தி செய்பவன்
கருப்பு பணத்திடம் கையேந்துவதேன்
காலை வெட்டி மலை உடைத்து நாடு சமைப்பவன்
வீடின்றி வீதிமுனையில் வாடுவதேன்
மணிமேகலை பார்த்த மணித்திருநாட்டில்
பட்டினி சாவோலை தொடர்வதேன்
என்னுள் கேள்விக் குறிகள் இன்னும்
வேள்வி நடத்திக்கொண்டிருக்கின்றன.
- சித்ரா
Subscribe to:
Posts (Atom)