Tuesday, May 02, 2006

எல்லாம் நீயே

ஆல் இலையில்
கால் கடிக்கும் கண்ணா

மண்ணையும் வெண்ணையும்
என்னையும் தின்பவனே கண்ணா

குயிலோசை குழலோசை
உயிரோசை நீயே கண்ணா

எனக்குப் பிடித்த

நீல வண்ணம் நீ
நிலையான காதல் நீ
படிக மாலை நீ
பாரதிப் பாடல்கள் நீ
குறும்புகள் நீ
குழந்தைத்தனம் நீ
அலைகடல் நீ
ஆனந்த தாண்டவம் நீ

எனக்குப் பிடித்த

வெள்ளைத் தாமரை நீ
வினாயகர் பொம்மை நீ
இளநீர் நீ
இசைத்தொகுப்பு நீ
காட்டு அருவி நீ
சிட்டுக் குருவி நீ
படகு சவாரி நீ
பனிச் சாரல் நீ

எனக்குப் பிடித்த

நகைச்சுவை நீ
நவராத்திரி கொலு நீ
சுவையான உணவு நீ
சிற்பங்கள் நீ
கலாச்சாரம் நீ
கவியரங்கம் நீ
முத்தங்கள் நீ
முழு நிலவு நீ

எனக்குப் பிடித்த

தியாகராசர் ஆராதினை நீ
திருமலை உற்சவம் நீ
வேடிக்கை விழையாட்டு நீ
வேதங்கள் மந்திரங்கள் நீ
ஆங்கில இலக்கியம் நீ
அழகான சோலை நீ
மழைச் சாரல் நீ
மனித நேயம் நீ

என்
திமிர் நீ
தன்னம்பிக்கை நீ
தன்மானம் நீ
உண்மைகள் நீ

என்
அம்மா நீ
குழந்தை நீ
சொந்தம் நீ
உலகம் நீ
எனக்கு
எல்லாம் நீயே
கண்ணா.

-பி.எம்.நாகராஜன்

3 comments:

  1. kannan kavithai impressed me so much

    ReplyDelete
  2. kanan kavithaikal niraiya velidavum

    ReplyDelete
  3. What a nice kannan kavithai, keep on writing

    ReplyDelete