ஆல் இலையில்
கால் கடிக்கும் கண்ணா
மண்ணையும் வெண்ணையும்
என்னையும் தின்பவனே கண்ணா
குயிலோசை குழலோசை
உயிரோசை நீயே கண்ணா
எனக்குப் பிடித்த
நீல வண்ணம் நீ
நிலையான காதல் நீ
படிக மாலை நீ
பாரதிப் பாடல்கள் நீ
குறும்புகள் நீ
குழந்தைத்தனம் நீ
அலைகடல் நீ
ஆனந்த தாண்டவம் நீ
எனக்குப் பிடித்த
வெள்ளைத் தாமரை நீ
வினாயகர் பொம்மை நீ
இளநீர் நீ
இசைத்தொகுப்பு நீ
காட்டு அருவி நீ
சிட்டுக் குருவி நீ
படகு சவாரி நீ
பனிச் சாரல் நீ
எனக்குப் பிடித்த
நகைச்சுவை நீ
நவராத்திரி கொலு நீ
சுவையான உணவு நீ
சிற்பங்கள் நீ
கலாச்சாரம் நீ
கவியரங்கம் நீ
முத்தங்கள் நீ
முழு நிலவு நீ
எனக்குப் பிடித்த
தியாகராசர் ஆராதினை நீ
திருமலை உற்சவம் நீ
வேடிக்கை விழையாட்டு நீ
வேதங்கள் மந்திரங்கள் நீ
ஆங்கில இலக்கியம் நீ
அழகான சோலை நீ
மழைச் சாரல் நீ
மனித நேயம் நீ
என்
திமிர் நீ
தன்னம்பிக்கை நீ
தன்மானம் நீ
உண்மைகள் நீ
என்
அம்மா நீ
குழந்தை நீ
சொந்தம் நீ
உலகம் நீ
எனக்கு
எல்லாம் நீயே
கண்ணா.
-பி.எம்.நாகராஜன்
kannan kavithai impressed me so much
ReplyDeletekanan kavithaikal niraiya velidavum
ReplyDeleteWhat a nice kannan kavithai, keep on writing
ReplyDelete