தமிழ் குழந்தை
தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
Sunday, June 29, 2008
நானில்லை
நீ
ஊதியவுடன் அணைந்து விட
நான் ஒன்றும்
திரி விளக்கு அல்ல.
தினம் தினம்
புதியதாய்
உதித்துவரும் சூரியன்
என்னைத் தீண்டிய
உன் கைகள்
கருகாமல்
இருந்திருந்தால்
நீ தீண்டியது
சத்தியமாக நானில்லை
- பி. எம். நாகராஜன்
நீந்தக் கற்றுக்கொள்
வைகையாக இருந்தால்
ஒரு நாள் வற்றும்.
ஜீவநதி சிந்துவாக இருந்தால்?
நீர் தீரும்வரை
காத்திருப்பதைவிட
நீந்தக்கற்றுக்கொள்
கரை உன் காலடி
தேடி வரும்
பி.எம்.நாகராஜன்
Newer Posts
Older Posts
Home
View mobile version
Subscribe to:
Posts (Atom)