Thursday, March 27, 2008

இரவின் விடியல்

புதிய
வெளிச்சத்தைப்
பார்த்த பரபரப்பில்
விளக்கின் மீதே
விழுந்த விட்டில்கள் நாம்!

சுட்டபொழுது
சுதாரித்துக்கொண்டோம்
விழுங்கிய தீயையே
தீபமாக்கி
நம்மில் எரியவிட்டு
மின்மினிகளானோம்!

கோடானுகோடி
மின்மினிகள்
கூடியதால்
இருளின் சிறகுகள்
படபடக்க
இரவிலேயே விடிந்தது!

- மதீன் சையத்

No comments: