Friday, June 02, 2006

அம்மாக் கண்ணு பாட்டு

1. பூட்டைத் திறப்பது கையேலே_ நல்ல
மனந் திறப்பது மதியாலே,
பாட்டைத் திறப்பது பண்ணாலே,- இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.

2. ஏட்டைத் துடைப்பது கையாலே- மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே,
வேட்டையடிப்பது வில்லாலே_ அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே.

3. காற்றை யடைப்பது மனதாலே_ இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலே- உயிர்
துணை வுறுவது தாயாலே. (பூட்டைத்)

-பாரதியார்

No comments: