Monday, June 05, 2006

கண்ணம்மாவின் நினைப்பு

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி!- கண்ணம்மா!
தன்னையே சசியென்று சரணமெய்தினேன்! (நின்னையே)

சரணங்கள்

பொன்னையே நிகர்த்த மேனி மின்னை யே, நிகர்த்த சாயற்
பின்னையே!- நித்ய கன்னியே! கண்ணம்மா! (நின்)

மாரனம்புக ளென்மீது வாரி வாரிவீச நீ- கண்
பாராயோ? வந்து சேரா யோ? கண்ணம்மா! (நின்)

யாவுமே -இங்கு யாவுமே, கண்ணம்மா! (நின்)

-பாரதியார்

No comments: