Monday, June 05, 2006

கண்ணம்மாவின் காதல்

1. காற்று வெளியிடைக் கண்ணம்மா,_ நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்;_ அமு
தூற்றினை யொத்த இதழ்களும்- நில
வூறித் ததும்பும் விழிகளும்- பத்து
மாற்றுப்பொன் னாத்தநின் மேனியும்- இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்_ எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே _இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே!- இந்தக் (காற்று)

2. நீயென தின்னுயிர் கண்ணம்மா_ எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன்_ துயர்
போயின, போயின துன்பங்கள்_ நினைப்
பொன்னெக் கொண்ட பொழுதிலே_ என்றன்
வாயினி லேயமு தூறுதே_ கண்ணம்
மாவென்ற பேர் சொல்லும் போழ்திலே_ உயிர்த்
தீயினி லேவளர் சோதியே!_ என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே!_ இந்தக் (காற்று)

-பாரதியார்

No comments: