Tuesday, February 05, 2008

பிரதிபலிப்பு

மகிழம் பூப்போல
உறுத்தாமல் முகத்தில் விழும்
குளிர் மழைச்சாரல்.
ஜன்னல் கம்பிகளுக்குப்பின்
எட்டிப்பார்க்கும் அணில் குஞ்சு.
கால் மேல் கால் போட்டு
மோனத்தில் சிரிக்கும் குழந்தை.
அகல் விழக்கின் மெல்லிய
தீஞ்சுடர்.
இவைகள் எனக்கு உன்னை
ஞாபகப்படுத்துவது போல
நீ எனக்கு இவைகளை.

- மாலினி புவனேஷ், காலச்சுவடு

1 comment:

Anonymous said...

ஜக ஜக கில்லாடி சார் நீங்க