Monday, February 11, 2008

குருவிக்கூடு

நிலத்தை ஆக்கிரமித்த தன் செயலுக்கு ஈடாக
மொட்டை மாடியை தந்தது வீடு.
இரண்டடி இடத்தையே எடுத்துக்கொண்டு
உயர்ந்து.
தன் அன்பை விரித்திருந்தது மரம்.
அந்த மரக்கிளையோடு அசையும்
ஒரு குருவிக்கூடாய்
அசைந்தது.
நான் அமர்ந்திருந்த அந்த மொட்டைமாடி.

-தேவதேவன், காலச்சுவடு

No comments: