Wednesday, June 07, 2006

வந்தே மாதரம்

பல்லவி

வந்தே மாதரம் என்போம் _எங்கள்
மாநிலத் தாயை வணங்குது என்போம்

சரணங்கள்

1. ஜாதி மரங்களை பாரோம்_ உயர்
ஜன்மம் இத்தேசத்தில் எயதின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே_ அன்றி
வேறு குலத்தின் ராயினும் ஒன்றே (வந்தே)

2. ஈனப் பறையர்க ளேனும_ அவர்
எம்முடன் வாழ்த்திங் கிருப்பவர் அன்றோ?
சினத்த ராய்விடு வாரோ?_ பிற
தேசத்தார் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

3. ஆயிரம் உண்டிங்கு ஜாதி_ எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?- ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்_ தம்முன்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

4. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு_ நம்மில்
ஒற்றமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்_ இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும் (வந்தே)

5. எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்- வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)

6. புல்லடி மைத்தொழில் பேணிப்- பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர- இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)

-பாரதியார்

1 comment:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

தயவு செய்து எழுத்துப் பிழைகளைத் திருத்துங்களேன்.

-ப்ரியமுடன்
சேரல்