Monday, March 13, 2006

நினைகின்றாய்

நீ நினைகிறாய்
உன்னிடத்தில்
என் நினைவு இல்லை
என்று
ஆனால்
எனக்கு தெரியும்
இருக்கின்றது
என்று

எப்படி என்று
கேட்கின்றாயா?
மழை வருவதை
வானம் காட்டிவிடும்
புயல் வருவதை
மரங்கள் காட்டிவிடும்
அதுபோல்
உன் மனதை
உன் செயல் காட்டிவிடும்

உன் அன்பை
வெளிகாட்ட
மறுக்கின்றாய்
ஏன்?

ஒவ்வொரு நாளும்
அந்த உன் சிரிப்பு
அந்த உன் பார்வை
அது என்றும்
எனக்காக
வேண்டி
மட்டும்
அமைய
எனக்கு சாதகமான
உன் பதிலை
எதிபார்த்து காத்திருக்கும்
உன் செல்லம்

புன்னகை மன்னன்

No comments: