Monday, April 10, 2006

சிப்பி

முத்தே!
என் முதலே!
செல்லமே
என் சேயே! - உன்னை
செதுக்கி வைத்திருக்கும்
சிற்பியல்ல நான்
பதுக்கி வைத்திருக்கும்
பாசமுள்ள சிப்பி
தொப்புள்கொடி அறுத்து
உன்னை பிரிக்கும்போது
அம்மா அல்லடா நான்
அனாதை பிணம்.

-பி.எம்.நாகராஜன்

No comments: