Wednesday, April 19, 2006

அன்பே..

அன்பே..
உன் கண்கள்
என் செயல்களை பார்க்கையில்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் கைகள்
என் கற்பனைகளை வரைகையில்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் கால்கள்
என் வெற்றி பாதையில் நடக்கையில்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் முகத்தை
என் இதயக் கண்ணாடியில் பார்க்கையில்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் காதுகள்
என் இனியவைகளை கேட்கையில்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் வார்த்தைகள்
என் மனதை குளிர செய்கையில்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் உதடுகள்
புன்னகை பூக்களை உதிர்க்கையில்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் நினைவுகள்
என் சிந்தனையை சீர்படுத்தினால்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் பொன்மொழிகள்
என் வாழ்க்கையில் திருப்புமுனையானால்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
என் இதயத்தின் இடைவெளியில்
இயல்பாய் இருக்கையில்
அன்பே நீ அழகு தான்.
ஆயிரம் முறை சொல்வேன்,
அன்பே நீ அழகு தான்!!!

- ஜஹபர் சாதிக்.M

1 comment:

Anonymous said...

nalla kavithai
nice kavitha
good