Friday, April 07, 2006

பக்தி

புத்தியால் நீ
புவியை வெல்லலாம்
பக்தியால் மட்டுமே
சக்தியை வெல்ல முடியும்
தெய்வங்கள் மூவரையும்
தூளியில் தாலாட்டியவளே
அத்திரியின் பத்தினி அனுசுயா

காதலே பக்தி
அதற்கென்று ஏதுமில்லை
அதுவில்லாமல் எதுவுமில்லை

புத்தியிருக்குமானால் அது
பக்தியும் இல்லை
ஆதி சிவனை காலால்
மிதித்தவனே கண்ணப்பன்

கற்பு இல்லையானால் அது
காதலும் இல்லை.
தீயிற்கு மதுரையை
தீனி போட்டவளே கண்ணகி

கண்களே புத்தியின் வழி
கண்னில்லாததே காதல்-பழமொழி
தீச்சட்டி ஏந்துவதும்
தீ மிதிப்பதும்
தன்னையே தருவதும்
பக்தி மட்டுமே.

- பி.எம்.நாகராஜன்

No comments: