Monday, April 03, 2006

அன்றில்கள்

கோடி கோடி பறவைகளில் - நான்
கோடிட்டு படித்தது அன்றில்களைத்தான்
அவர்களைப் பயிலாதவரை
எவரும் உயிராவதில்லை
அவர்களை மதிக்காதவரை
எவரும் மனிதராவதில்லை
அவர்களை எழுதாதவரை
நானும் முழுமையாவதில்லை

நீவிர் இணையாக
நீந்தி வரும்போது
இடையில் தாமரைகள்
தடையாக நின்று
உங்களை பிரிக்குமானால்
தற்கொலை செய்வீராமே

கல்லணையால் காவிரியைத்
தாலாட்டினான் அந்தச் சோழன்
சொல்லணையால் உங்களைச்
சீராட்டுகிறேன் இந்தத் தோழன்
உண்மையான அன்புக்கு
உதாரணமான பறவைகளே
களங்கமில்லா காதலுக்கு
கற்பான பறவைகளே
சங்க இலக்கியங்கள்
உங்களுக்கு நாங்கள் தந்த
வேடந்தாங்கல்கள்

நீங்கள் இல்லாமல் போனதற்க்கு
தாமரை தான் காரணமென்றால்
தேசிய மலர் பட்டத்தை
திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்

இருகைகளும் கூடுகின்றன
இருகண்களும் மூடுகின்றன
வண்ங்குகிறேன் உங்களை
வணக்கம்.

-பி.எம்.நாகராஜன்
மின்னஞ்சல்

No comments: