Wednesday, May 03, 2006

காடு

முட்புதர்கள் மொய்த்ததரை எங்கும்!
முட்டுகருங் கற்களும்நெருங்கும்-மக்கள்
இட்டடி எடுத்தெடுத்து வைக்கையிலே
கால்களில்தடுங்கும் உள்
நடுங்கும்


கிட்டிமர வேர்கள்பல கூடும்- அதன்
கீழிருந்து பாம்புவிரைந் தோடும்- பாடி
மட்டையசை வால்புலியின்
குட்டிகள் போய்த் தாய்புலியைத்
தெடும்- பின்
வாடும்.

நீள் கிளைகள் ஆல்விழுதி னோடு -கொடி
நெய்துவைத்த நற்சிலந்திக் கூடு- கூர்
வாளெயிற்று வேங்கையெலாம்
வால் கழற்றிப் பாயவருங்
காடு -பள்ளம்!
மேடு!

கோளாடும் கிளம்பிவரும் பன்றி- நிலம்
கீண்டுகிழங் கேஎடுத்த தன்றி- மிகு
தூளிபடத் தாவுகையில்
ஊளையிடும் குள்ளநரி
குன்றில்- புகும்
ஒன்றி

வானிடைஓர் வானடர்ந்து வாறு- பெரு
வண்கிளை மரங்கள் என்ன வீறு! நல்ல
தேனடை சொரிந்ததுவிம்
தென்னை மரம் ஊற்றியதும்
ஆறு- இன்பச்
சாறு!

கானிடைப் பெரும்பறவை நோக்கும்- அது
காலிடையே காலிகளைத் தூக்கும்- மற்றும்
ஆனினம் சுமந்தமடி
ஆறெனவே பால்சுரந்து
தீர்க்கும்- அடை
ஆக்கும்.

-பாரதிதாசன்

No comments: