Friday, May 12, 2006

என்னவளே!

முட்களாய் இருந்த என்னை
மலராய் மாற்றியவள்
கவிதையெனும் காவியத்தை
கடைவிழியில் கற்பித்தவள்
வாழ்க்கையெனும் பாதையை - வெறும்
வார்த்தைகளால் விளக்கியவள்
அன்பென்னும் தோட்டத்தில்
அரசனாக்கியவள் - அவள்
முயற்சிகளின் தோல்வியை
முன்னேற்றமாக்கியவள்
புரியாத புதிர்களை - வெறும்
புன்னகையிலிட்டவள்
பொறுமையெனும் பெரும் குணத்தை
பொக்கிசமாய் தந்தவள்
வெற்றியெனும் சாதனையை
வெல்லமாய் அளித்திட்டவள்.

- ஜஹபர் சாதிக்.M

1 comment:

Anonymous said...

Super Nalla Kavithai!!!