Tuesday, May 23, 2006

நான் மலர்வேன்

நீ
தொலைவில் வரும்போது
நான்
பக்கப்பார்வை அற்றவன்.

என்னை
தொட்டுக் கொண்டிருக்கும்போது
எப்போதும்
தூரப்பார்வை அற்றவன்

அருகே இருந்தால்
அமிர்தமும் தெவிட்டுமாம்
தென்றலே! - நீ மட்டும்
தெவிட்டாமல் இருப்பது
எப்படி?

அந்த ஆதவனால்
ஆயிரம் பூக்கள்
மலரலாம்.

உன்னால் மட்டுமே
நான் மலர்வேன்.

- பி.எம்.நாகராஜன்

No comments: