Friday, May 05, 2006

தென்றல் செய்த குறும்பு

இழுத்திழுத்து மூடுகின்றேன் எடுத்தெடுத்துப் போடுகின்றாய்
பழிக்க என்றன் மேலாடைத் தென்றலே- உன்னைப்
பார்த்து விட்டேன் இந்தச் சேதி ஒன்றிலே
சிலிர்க்க சிலிர்க்க வீசுகின்றாய்
செந்தாழை மணம் பூசுகின்றாய்
குலுங்கி நடக்கும் போதிலே என் பாவாடை- தலைக்
குறுக்கில் நெடுக்கில் பறக்கச் செய்தாய் தென்றலே
வந்து வந்து கன்னந் தொட்டாய்
வள்ளைக் காதில் முத்தமிட்டாய்
செந்தாமரை முகத்திளை ஏன் நாடினர்- ஏன்
சீவியதோர் குருங்கழலால் மூடினாய்
மெலுக்குமெல் குளிரைச் செய்தாய்
மிகமிகமிக் களியைச் செய்தாய்
உள்ளுக்குள்ளே கையை
வைத்தாய் தென்றலே
உயிருக்குள்ளும் மகிழ்ச்சி வைத்தாய் என் தென்றலே

-பாரதிதாசன்

No comments: