Saturday, May 27, 2006

அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதினும்

அச்சிமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்

அச்சிமில்லை அச்சமில்லை அச்சமெனப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணு, வாழ்க்கை பெற்று விட்ட போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
கச்கணிந்த கொங்கை மாதர் கணகள் வீசு போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
நச்சை வாயிலே கொணர்ந்து நணப ரூட்டு போதனும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சை நுனினையந்த வேற்படைகள் வந்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

-பாரதியார்

No comments: