Monday, May 15, 2006

நீ எனக்கு வேண்டும்

வானுக்கு நிலவு வேண்டும்
வாழ்வுக்குப் புகழ் வேண்டும்
தேனுக்குப் பலாச்சுளை வேண்டும்- என்
செங்கரும்பே நீ எனக்கு வேண்டும்!

மீனுக்கு பொய்கை வேண்டும்
வெற்றிக்கு வீரம் வேண்டும்
கானுக்கு வேங்கைப்பபுலி வேண்டும்- என்
கண்ணாட்டியே நீ எனக்கும் வேண்டும்!

வாளுக்குக் கூர்மை வேண்டும்
வண்டுக்கு தேன் வேண்டும்
தோளுக்குப் பூமாலை வேண்டும்-அடி
தோகையே நீ எனக்கு வேண்டும்!

நாளுக்குப் புதுமை வேண்டும்
நாட்டுக்கே உரிமை வேண்டும்
கேளுக்கே ஆதரவு வேண்டும்
கிள்ளையே நீ எனக்கு வேண்டும்!

-பாரதிதாசன்

No comments: