Monday, May 22, 2006

ஒன்றும் இல்லை

கடலே - உனக்குள்
காணாமல் போன
காவிரியாறு நான்.

என்னையில்லை என்றாலும்
இன்னொருவரை நீ
என்றாவது ஒருநாள்
உண்மையாக நேசிப்பாய்
அப்போதாவது உணர்வாய்
அல்லவா!

உன் சாதாரணங்கள்
எனக்குத் தந்த ரணங்களை.

உன் பிடிவாதங்கள்
எனக்கு தந்த அடிகளை

காக்கைக்கும்
தன் குஞ்சு
பொன் குஞ்சு
ஒன்று தெரிகிறது - நான்
உன் குஞ்சு இல்லை

விலகிக் கொள்கிறேன்
விலகி விடு
விட்டு விடு
உனக்கும் எனக்கும்
ஒன்றும் இல்லை

-பி.எம்.நாகராஜன்

No comments: