Monday, May 22, 2006

தமிழன்

பிறக்கும் போதே பெருமையோடு
பிறந்தவன் தமிழன்- தமிழ்ப்
பெருங்குடி தன்னிற் பிறந்தவன் ஆதலால்- பிறக்கும் போதே...

இறப்பதே இல்லை தமிழன்- புகழுடம்பை
எங்குமே வைத்தது காண்க

மறக்குமா வையம் தமிழன்- மனப்பாங்கு
வளர்த்த அறத்தையும் அறிவையும்?
சிறப்பதென்றால் தமிழாற் சிறக்க வேண்டும்
தீர்வதென்றால் தமிழ் மறந்து தீர்தல் வேண்டும்- பிறக்கும் போதே...

முதலில் தோன்றிய மனிதன் தமிழன்
முதல்மொழி தமிழ் மொழி- ஆதலால்
புதுவாழ் வின்வேர் தமிழர் பண்பாடே- பிறக்கும் போதே...

முதுகிற்புண் படாதவன் தமிழன்- போர்எனில்
மொய்குழல் முத்தமென் றெண்ணுவான்
மதிப்போடு வாழ்பவன் தமிழன்
வாழ்வதற்கென்று வாழ்பவன் அல்லன்- பிறக்கும் போதே...

-பாரதிதாசன்

No comments: