Tuesday, May 23, 2006

உன்னை விலக அல்ல

பிச்சிப் பூவே!
உச்சி முதல்
உள்ளங்கால் வரை
முத்தங்களால் உன்னை
எச்சில்படுத்திப் போகும்
காற்றை முகர்ந்துபார்
என் மூச்சின்
வாசனைதான் வீசும்

நான்
உன் வீட்டு முற்றம் தான்
சின்னச் சின்ன கோலங்களால்
என்னைச் சிங்காரிக்காவிடிலும்
பள்ளங்கள் தோண்டி - என்
உள்ளத்தைப் புண்ணாக்காமல்
இருந்திருக்கலாமே!

எரிவாயுவினால் என்னை நீ
எரித்துக் கொன்றாலும்
கடுகடுவென என்னை நீ
கரித்துக் கொட்டினாலும்
உன்னை விலக அல்ல
உலகை விலகவே
விரும்புகிறேன்.

-பி.எம்.நாகராஜன்

2 comments:

Anonymous said...

touching kavithai

Anonymous said...

wow, welldone